Posts

Showing posts from July, 2017

வீதிக்கு வா...என் தோழி...!!!!!

Image
பிச்சையும் பாலியல்  தொழிலும்  நம் விதியில்லை...  போராடினால்  நமக்கு இழிவில்லை..  அதனால்  போராடுவோம்  வா....என் தோழி...!                                                                                                            கண்ணீரிலும்...  கவலையிலும்...  எத்தனை நாள் உழல்வது..!  அதை துரத்தி  அழிக்க வீதிக்கு  வா என் தோழி..!  ஒன்பதா நாம்...!  அலியா நாம்...!  உஸ்ஸா...நாம்....!  இல்லை....! இல்லை !  மாணுடம் நாம்...!   நமக்கென ஆசையும்  நமக்கென லட்சியமும் இருக்கிறது...  அதை மறித்து  தீண்டாமையின் கெட்டிப் பாறை  அதோ....  இச்சமூகத்தில் உயர்ந்து நிற்கிறது...!  அதை சிலையாய் செதுக்கிட  சுத்தியும் உளியாக..  அறிவையும்...முழக்கத்தையும்  ஓங்கி ஒலித்திடு என் தோழி..!  குடும்பம் துரத்தி சமூகம் விரட்டிய போதிலும்  பகை கொள்ளாமல்  மானுடத்தை நேசிக்கும்  அற்புத உயிரிகள் நாம்...!  இம்மண்ணின் மைந்தர்கள் நாம்..!  அதனால் போராட  வீதிக்கு வா....என் தோழி...!   அதோ...  நாடாளுமன்றத்திலே....  நம் உரிமை மசோதா காத்துக்கிடக்கிறது...  அதை பூக்கச் செய்திட..  வீதியில் முழங்கு

மாற்றுப் பாலினத்தோரின் உடலியங்கியலில் குழம்பி நிற்கும் உலக ஜனநாயகம்…! அதில் விஞ்சி நிற்கிறது ட்ரம்பின் அதிகாரம்..!

Image
மாற்றுப் பாலினத்தோரின் உடலியங்கியலில் குழம்பி நிற்கும் உலக ஜனநாயகம்…! அதில் விஞ்சி நிற்கிறது ட்ரம்பின் அதிகாரம்..!  பிரபஞ்ச ஆய்வு,பரிணாம ஆய்வு என பல்வேறு ஆய்வுகளில் படிப்படியான முன்னேற்றத்தை அடைந்து வரும் மனித சமூகத்தின் இன்றையக் கட்டமான ஜனநாயக வடிவம்.மாற்றுப் பாலினத்தோரின் உடலியங்கியலில் குழம்பிய ஒரு புரிதலில், அக்கறையற்றும் வெறுப்புற்றுமே காட்சியளிக்கிறது. இந்திய ஜனநாயகத்தை தாங்கி நிற்கும் தூண்களில் ஒன்றான நம்முடைய நாடாளுமன்றத்தில் ’மாற்றுப் பாலினத்தோர் மசோதா 2016’ கேட்பாரறற்றுக் கிடப்பது,அச்சபையில் ஆளுமைப் புரியும் அக்கணவான்களின் வெறுப்பையே நமக்கு பிரதிபளிக்கிறது. இத்தகைய வெறுப்பின் பிரதிபளிப்பைத் தான் அமெரிக்க ஜனநாயகத்தை தற்போது வழி நடத்திக் கொண்டிருக்கும் டெனால்ட் ட்ரம்ப் அவர்களும் ஓர் அறிவிப்பின் மூலம் செய்திருக்கிறார்.   ’’அமெரிக்க ராணுவத்தில் “எந்த விதத்திலும்” திருநங்கைகள் பணியாற்ற முடியாது ’’.என்றும் அதற்கான காரணமாக “ இவர்கள் ராணுவத்தில் பணியாற்றுவதினால் வியக்கத்தக்க அளவில் மருத்துவ செலவுகளும், இடையூறுகளும் ஏற்படுகிறது”என்றும் கூறுகிறார்.அவருடைய விசித்திரக் கருத்தின் உள்

மாற்றுப்பாலினத்தோர் இயற்கையே!!!!

Image
தான் இன்னவென்ன்று அடையாளப் படுத்திக்கொள்வது உயிரியின் இயல்பு.தான் இதுதான் என்று வெளிப்படுத்துதலில் எந்த உயிரினமும் சமரசம் செய்து கொள்வதில்லை. ஓர் உயிரிலிருந்து மனித உயிரி வரை இது பொருந்தும். இயற்கையிலிருந்துதான் உயிரிகள் உருவாகின்றன. இயற்கையோடு இயைந்து இருக்கத்தான் அவை தன்னை உருவகப்படுத்திக்கொள்கின்றன. பச்சைக்கிளி பச்சையாக இருப்பதற்கும் குரங்கு நிமிர்ந்து மனிதனாக மாறியதற்கும் இயற்கை வீதியில் தன்னை உருவகப்படுத்திக்கொண்டு உலாவருகி ன்றன . இயற்கை ,உயிர்,அதன் வளர்ச்சி என்கிற புரிதலோடு திருநங்கை,திருநம்பி என்கிற எங்களின் பாலினத்தை ஒருவர் அணுகினால் அவர் நிச்சயம் இயற்கை படைப்புதான் நாங்கள் என்கிற உண்மையை தொடமுடியும். ...மதிப்பிற்குரிய மங்கை பானு

கொலை ஆயுதமாக்கப்பட்ட தாமிரபரணி ஆறு

Image
அந்த வலி சிறு வயதில் என் இதயத்தில் தைத்த முள் வலி இன்று வரையில் என் மக்கள் மீது விழுந்த ஒவ்வொரு லத்தி அடியும் அவர்கள் கதறிய அந்த கதறல்களும் தண்ணீரில் மரித்த எம் முன்னோர்களும் என் இதயத்தில் இன்று வரையில் கொடிய வலியாய் இருந்து கொண்டே இருக்கிறார்கள்.என்னால் அந்நிகழ்வை மறக்கவும் முடியாது என்னால் அக்கொடூரத்தை  மன்னிக்கவும் முடியாது.எவ்வளவு பெரிய கொரூரத்தை நிகழ்த்திவிட்டு ஆசுவாசமாய் ஆட்சி ஆளுகிறார்கள் இந்த ஆட்சியாளர்கள் என நினைக்கும் போது கோபத்தின் உச்சியில் என் உணர்வுகள் செல்கிறது.நான் ருசித்துப்பருகும் அந்த தாமிரபரணியின் நீரை என் மக்களுக்கான விஷமாய் மாற்றியவர்கள் இவர்கள்தானே!!!..சில நாட்களுக்குமுன்னால் வல்லநாட்டுக்கருகில் என் உயிர்த்தாய் தாமிரபரணியில் மூழ்கி நீந்தாலாமென்று ஆசையாசையாய் சென்றேன்  இங்கேயே ஊற்றாகி இங்கேயே உயிராகும் அந்த வற்றாத ஜீவநதி வறண்டிருப்பதை கண்டேன் அன்று ஆட்சியாளர்கள் செய்த சூழ்ச்சியினால் மக்கள் கொலைக்கு தானும் காரணமாகிவிட்டோமே என்று எண்ணி எண்ணியே இந்த ஆறு வறண்டு போயிருக்குமோ என்ற சிந்தையே என்னுள் எழுந்தது.உயிர்நீரை பருகி புதுவித ஈரமலர்களாய் பூத்து ஒளிரிய தாமி

நலவாரியம் போதாது இடப்பங்கீடே வேண்டும்...!!!!!

Image
நலவாரியம் போதாது இடப்பங்கீடே எங்களின் அடிப்படை…! ……………………………………………………………………….. உலகில் உள்ள ஒடுக்கப்பட்ட இனங்களில் மிகவும் ஒடுக்கப்பட்ட இனமாக என் திருநர் பாலினம் இருக்கிறது.பல வடிவங்களினாலான தீண்டாமைகளையும் ஒடுக்கு முறைகளையும் மொத்தமாய் சுமந்து திரிபவர்கள் நாங்கள்.குடும்ப தீண்டாமை,சமூக தீண்டாமை,அரச தீண்டாமை என மூன்றும் இணைந்து குழைந்து உருவாக்கப்பட்ட கொடிய ஆயுதத்தினால் தினம் தினம் எங்களின் மாணுட உணர்வுகளும் உணர்ச்சிகளும் சுயமரியாதையும் சித்ரவதை செய்யப்பட்டுக் கொண்டே இருக்கிறது.அந்த ஆயுதம் பல வடிவங்களில் தன்னை உருமாற்றி,காலத்திற்கு தகுந்தாற் போல நெகிழ்வு தன்மையைக் கொண்டு,மேலோட்டமாக முற்போக்கானதாக வெளிப்படுத்திக் கொண்டே உள்ளடக்கத்தில் அச்சித்திரவதையை புரிந்து கொண்டே இருக்கிறது. எங்களுக்காக அமைக்கப்பட்ட பெயரளவிலான நலவாரியம் அப்படிப்பட்டதே…….. ஆட்சிகள் மாறினால் காட்சிகள் மாறுமென்பார்கள்.உண்மைதான் இங்கேயும் அப்படித்தான். திருநங்கையர்களின் சமூக பாதுகாப்பு கருதி   15 ஏப்ரல் 2008 ஆம் ஆண்டு தமிழக அரசு திருநங்கையர்களுக்கு தனி நலவாரியம் அமைத்தது.வரலாற்று வழியில் அப்போதைய தமிழக அரசின் இவ்

நெருக்கடி நிலை எம் பாலினத்தோருக்கு மட்டும்

Image
என்னை  பொறுத்த வரையில் இந்நாட்டில் நெருக்கடியான நிலையினால் எம் பாலினத்தின் அடிப்படை உரிமைகள் எப்போதும் மறுக்கப் பட்டே வருகிறது. அந்நியர்கள் ஆயுதம் தாங்கிய போர் ஏதும் நிகழ்த்தவில்லை.ஆனால் நெருக்கடி நிலை அதுவும் எம் பாலினத்தோருக்கு மட்டும்.  மாநிலங்களில் அரசியலமைப்பு இயங்கும் முறை பெரும்பாலும் செயலற்றுப் போகவில்லை ஆனால் நெருக்கடி நிலை அதுவும் எம் பாலினத்தோருக்கு மட்டும்.  எம் பாலினத்தைப் போன்று பிச்சையெடுத்து பாலியல் தொழில் செய்து இந்நாட்டில் பெரும்பாண்மையோர் உண்ணவில்லை.அதுப் போன்ற நிதி நெருக்கடியும் இங்கில்லைஆனால் நெருக்கடி நிலை அதுவும் எம் பாலினத்தோருக்கு மட்டும். இந்திய அரசியலமைப்பு கூறுவதென்ன?மாநிலங்களில் அரசியலமைப்பு இயங்கா முறை ,அந்நியர்கள் போர் தொடுப்பு,நாட்டின் கடும் நிதி நெருக்கடி இம்மூன்றும் நிலவும் பட்சத்தில் இ.அ.அ.வழங்கும் அடிப்படை உரிமைகளை நெருக்கடி கால அறிவிப்பின் மூலம் குடியரசுத் தலைவர் தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடியும்.ஆனால் எங்களுக்கோ நிரந்தரமாக,குறிப்பாக மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட ஆட்சியாளர்களால் மறுக்கப் பட்டு வருகிறது. இந்திய அரசியலமைப்பின் அடிப்படைகளைப்

உங்களில் பாவம் செய்யாதோரே நாட்டை ஆளும் அவைகளில் அமரக் கடவது.

Image
உங்களில் பாவமில்லாதவன் இவள் மேல் முதலாவது கல்லெறியக் கடவது. யோவான் 8;7 இந்த நீதிக் குரல் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ரோம் சாம்ராஜ்யத்தில் நிலவிய அநீதியை எதிர்த்து எழுந்தது.!அன்று எழுந்த இக்குரலுக்கு பதில் கூற இயலாததாகவே இன்று வரையிலும் மக்களை ஆளும் அரசுகள் இயங்குகின்றன.உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு என கூறிக்கொள்ளும் இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல. ஒடுக்கப்பட்ட பாலினத்தவர்களான பெண்கள்,திருநர் விஷயத்தில் இத்தேசம் சரியான புரிதலுக்கு வராமல் இயலாமையும் கொரூரத்தையும் வெளிப்படுத்தும் விதமாகவே இயங்குகிறது. உலகில் நிகழும் பாலியல் வன்கொடுமைகள் நம் தேசத்தில் அதிகமாக நிகழ்வதாகவும் நம் பெண்கள் அதிகம் பாதிக்கப் படுபவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதை எத்தனையோ புள்ளி விவரங்கள்,நிகழ்வுகள் எடுத்துரைத்த போதிலும்..... கோடிக்கணக்கான பெண்களின் அறிவும் கரங்களும் அடுப்படியிலேயே உழல்வது தெளிவாக தெரிந்த போதிலும்.... குடும்பத்தால் விரட்டப்பட்டு,சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டு கல்வி கற்க முடியாமல்,உற்பத்தியில் ஈடுபடமுடியாமல் கடை வீதிகளில் பிச்சை எடுக்கும் திருநங்கைகளின் அவல வாழ்வியல் கண்ண

துண்டு சதை

Image
உயிரில் பரவிய பெண்மையில் பிணமாய் கிடந்த ஆணுறுப்பை வெறுத்தறுத்து புது  பாலினமானேன்.! அத்துண்டுச் சதையை குருதியோடு புதைத்த போதுதான் புரிந்தது அதன் அதிகாரப் பரப்பு.! அப்போது எனக்கு உறவுகள் இருந்தன வீடிருந்தது மதிப்பிருந்தது நான் மாணுடாமாகவும் இருந்தேன் ஆனால் என் பாலினம் மட்டும் என்னிடம்  இல்லை! இத்துண்டுப் பிணத்தை புதைத்த பின் என் பாலினம் என்னிடம் இருக்கிறது ஆனால் என் உறவுகளில்லை எனக்கென்று வீடில்லை சமூக மதிப்பில்லை நான் மாணுடமாகவே அங்கிகரிக்கப்படவுமில்லை.! சுய பாலினத்தோடு அங்கீகரிக்கப்படாத மாணுடமாய் வாழ்வதா...? சுயத்தை மறுத்த மாணுடப் பிணமாய் உழல்வதா...? எனக்கேற்பட்ட அதே சிந்தனை வலியில் ஆயிரமாயிரம் திருநர்கள் அறுத்தெரிய வேண்டிய அத்துண்டுச் சதையை சுமந்து திரிகிறார்கள் குடும்பக் குமிழில் மாணுடப் பிணங்களாய்...! நண்பர்களே... அவர்கள் உங்கள் பிள்ளைகளாக இருக்கலாயின் உங்கள் வீட்டை அவர்களுக்கான கல்லறைகளாக்காதீர்கள்..! அவர்களின் அழகான ரத்த உறவுகளான நீங்கள் அவர்கள் வெறுத்தொதுக்கும் எதிரிகளாய் உதிர்ந்து விடாதீர்கள்..! அவர்கள் தெரிவு செய்த பாலினத்தை

அன்புள்ள அம்மாவுக்கு......

Image
இவ்வுலகில் மிகவும் தூய்மையானது தாயின் நல் இதயமே என்பதாக ருஷ்யக்கவிஞன் சின்கிஷ் ஜத்மேத்தேவ் கூறியிருப்பார் .அம்மா இது உண்மைதான் என் இளம் வயதில் அதை உன்னுடன் இருந்து உணர்ந்திருக்கிறேன் .இப்போது தொலைவில் இருந்து அறிகிறேன் .என்னுடைய தம்பிகளுக்கும் அண்ணனுக்கும் கிடைத்த உன்னுடைய தூய இதயப்பாசம் எனக்கு கிடைக்காததை கண்டு நான் எந்த கோபமும் கொள்ளப்போவதில்லை .அம்மா அதே நேரத்தில் என் மீதும் கோவம் கொள்ளாதே .மகனாக. என்னை நீ பெற்றெடுத்த மகிழ்ச்சியில் திளைத்திருப்பாய் .நானோ உன்னுடைய மகளாகவே வளர்ந்த்தேன் ,மகளாகவே வாழ்வேன் ,மகளாகவே இறப்பேன். அம்மா. உனக்கும் எனக்கும் இடையே இருக்கிற பிரிவுக்கு நீயும் நானும் காரணம் அல்ல .உண்மையான காரணம் இத்தேசம் .உண்மைதான் அம்மா .நம் இருவரைப் பிரிப்பதில் இத்தேசம் உள்ளூர மகிழ்வத்காகவே நான் உணர்கிறேன் .உன்னை சுற்றி கட்டியெழுப்ப பட்டிருக்கும் போலியான கௌரவத்திற்கு கடந்த கால ஆட்சி முறைகளைப்போலவே இந்த "ஜனநாயக "ஆட்சிமுறைக்கும் முக்கிய பங்கு இருக்கிறது . நான் பாலினம் மாறி பிறந்தது உன் தவறோ என் தவறோ நம் தலைமுறை தவறோ அல்ல .அது இயற்கை விதி .இ

சமூகம்

Image
சமூகம் மிக கொடூரமானது திருநங்கைகள் உயர்கல்வி பயின்றால் 3000 ரூபாய் கொடுத்தால் மகிழ்ச்சியடைவார்கள் வாழ்த்து கூறுவார்கள் அதே திருநங்கைகள் குறைந்த மதிப்பெண் எடுத்து மருத்துவம் படிக்க ஆசை படுகிறேன் என்றால் இது எல்லாம் மிகையாக தெரியவில்லையா என்பார்கள் . இச்சமூகம் தனக்கு இணையாக ஒரு ஒடுக்கபட்ட பாலினத்தவர் வந்து அமரும் நிகழ்வை ஏற்றுகொள்ள மறுக்கிறது . கோடிக்கணக்கானோர் வாழும் இப்புவியில் என் குரல் அதிகார வர்க்கத்தினரின் காதில் போய் சென்றடைய கிட்ட தட்ட 69 வருடங்களுக்கு மேலாகின்றது . இம்ம ானுட உலகில் பல்வேறு வலிகள் , இழப்புக்களை சுமந்து என் திறமையை காட்டினால் மட்டுமே தட்டிகொடுக்கிறார்கள் . அவர்களுக்கு ( இச்சமூகம் ) சலுகைகள் தந்தால் சகித்து கொள்வார்கள் உரிமையை ( இடஒதுக்கீடு ) கேட்டால் பொங்கி எழுவார்கள் . இம்மாபெரும் ஜனநாயக நாட்டில் பிச்சையெடுத்தாலும் , பாலியல் தொழில் செய்தாலும் நானும் வரி செலுத்துகிறேன் . என்னுடைய வரிப்பணத்தில்தான் மின்சாரம் , சாலை , சட்டப்பேரவைகூட்டம் , அரசு அதிகாரிகளுக்கு சம்பளம் இவை அனை

திருநங்கையும் வாடகை வீடும்..

Image
மனிதன் வாழ தேவையான அடிப்படை வசதி உணவு , உடை , உறைவிடம் இவற்றுள் உணவு , உடை மட்டும் திருநர் சமூகத்திற்கு கிடைக்கிறது ஆனால் உறைவிடம் மட்டும் ??????? வேடந்தாங்கள் பறவைகள் போல ஒரு இடத்தில் தங்குவதற்கு குறைந்த நாட்கள் மட்டுமே வாழ இச்சமூகம் எங்களை அனுமதிக்கிறது . மிகுந்த வலியுடனும் வேதனையுடனும் ஒவ்வொரு இடத்தைவிட்டு இடம்பெயர்ந்து நாடோடிகளாக வாழும் நிலையை இச்சமூகம் எங்களுக்கு பரிசாக அளித்திருக்கிறது .   பிச்சையெடுத்தாலும் , பாலியல் தொழில் செய்தாலும் எங்களின் வரிப்பணம் மட்டும் வாங்கும் இந்த இந்திய அரசை நாங்கள் மனதார வாழ்த்துகிறோம் . பறவைகளுக்கு கூட கண்ணயர்ந்து அசதி மறக்க தலை சாய்க்க ஒரு கூடுண்டு ஆனால் என்னை போன்ற திருநர்களுக்கு இந்த வீட்டை எப்பொழுது வீட்டு முதலாளி காலி செய்ய சொல்லிவிடுவாரோ ????? என்ற பயத்தில் தூக்கம் தொலைந்து வாழ்கிறோம் ." எனக்குத் தாயகம் உண்டு என்று நீங்கள் கூறுகிறீர்கள் . ஆனால் , நான் மீண்டும் கூற விரும்புகிறேன் , எனக்கு அது இல்லை … நாய்கள் , பூனைகளைவிட நாங்கள் மோசமாக நட