Posts

Showing posts from August, 2017

உயிர் வளியில்லா அரசும்...!உயிர் வலி கொண்ட தேசமும்...!

Image
உயிர் வளியில்லா அரசும்...!உயிர் வலி கொண்ட தேசமும்...! பச்சை உடம்புக்காரிக்கு குழந்தை வந்த தடத்தின் ரணம் இன்னும் அப்படியே இருக்கிறது . இருபது நாட்களும் மழலையின் முகம் மட்டுமே அவளின் உடல் ரணத்தை ஆற்றும் பெரும் மருந்தாக இருக்கிறது . ரோஜாவின் நிறத்தை பூசி , அறுத்த தொப்புள் கொடியின் துண்டு இன்னும் உலர்ந்து உதிராமல் , மினுக், மினுகென கண்களை உருட்டி , அழுகையாலும் புன்னகையாலும் தன் வாழ்விற்காக பேரற்தத்தைக் கொடுத்த பூ சிசுவைப் பார்த்து மகிழ்வாள் தீபா . ஆஹா… இவ்வுலகில் குழந்தையை ஈன்றெடுத்த தாயின் மகிழ்விற்கு நிகரொன்று உண்டோ!எனும் பெருமிதத்தோடு பிரம்மித்து வந்தால் அவள்.அங்கே இவளின் குழந்தை சத்தமிட்டாள் இவளின் ரத்த நாளங்கள் கதறித் துடிக்கும்,அம்மழலை புன்னகை சிந்தினால் இவளின் இதயம் பூத்துக் குலுங்கும் பசியால் அச்சிசு பீறிட்டழுதால் “கண்ணே….செல்லமே….இங்கே வா….”என படற காத்திருக்கும் முல்லைக்கொடியைப் போல இவளின் முலைக்காம்பு மழலையின் வாய் தேடி அலையும் . இப்படித்தான் சென்றது ஒவ்வொரு நொடியும் இந்த இருபது நாளும் தீபாவின் கணவர் பழனிக்கும் பேரானந்தம்.மழல

மழையில் நனையா பூச்சிகளிடமிருந்து கற்றுகொண்ட பாடம்...

Image
நான் பிறந்ததிலிருந்து பார்த்திராத ஓர் அழகிய காட்சியை இன்றைய இரவில் கண்டேன்...!  அப்பப்பா.... அப்படியொரு பேரழகு அக்காட்சியில்..!  அதுதானோ இயற்கை எழில்..!  திடீரெனெ தூவும்,பெய்யும் இந்த ஆடி மழை...!  நம் தலைமயிரின் நுனியில் பூக்கும் லேசான மழை விதை அது.நான் இறங்கிய பேருந்து நிறுத்தத்தில் ஓங்கி வளர்ந்த இரும்பு கம்பத்தின் முனையில் நாற்புறமும் பிரகாசமாய் எரியும் விளக்கொளி.அந்த ஒளி பிரகாசத்தின் கீழ் வான் மேகம் வெண்ணிற மழை விதையை தூவும் காட்சி அற்புதமாய் மிளிர்ந்தது.மின் விளக்கொளியில் மிளிரும் கணக்கில்லா வெண் விதைத் தூவலின் ஈரம் படாமல், பிரகாசிக்கும் விளக்கொளியை நோக்கி பறக்கிறது சில சிறு பூச்சிகள்....!    எவ்வளவு அசாத்திய தையிரியம் இச்சிறு பூச்சிகளுக்கு என்பதை எண்ணி பிரம்மித்து போனேன். மழையில் நினைந்த வாரே ஓரம் நின்று அக்காட்சியை கூர்ந்து நோக்கலானேன். இதுவரையில் காற்றின் இசைக்கு தலை அசைத்த இலைகள் மழைத்துளிகளின் முத்தமிடலுக்கு சொக்கி கிடக்கும் போது, தன் ரெக்கையில் சிறு நீர்த்துளிப் பட்டாலே புவியில் வீழ்ந்து போகும் இச்சிறு பூச்சிகளுக்கு மட்டும் சொக்காமல் பறக்கும் துணிச்சல் எங்கிருந்த

தயைகூர்ந்து எங்களின் மீது உங்களின் சுதந்திர தின வாழ்த்தின் வன்மத்தை தெளிக்காதிருப்பீர்களாக..!

Image
தயைகூர்ந்து எங்களின் மீது உங்களின் சுதந்திர தின வாழ்த்தின்   வன்மத்தை தெளிக்காதிருப்பீர்களாக..! அவ்வார்த்தை ஒரு கொடிய அமிலமாய் எங்களை சுடுவதை உங்களால் உணரமுடிகிறதா...?   பிச்சையெடுக்கும் எங்கள் கரங்களால் பதில் வாழ்த்துக்களை சொல்லி உங்கள் கரங்களோடு எங்கள் கரத்தை குலுக்க இயலாது..! சுதந்திர தின வாழ்த்தையுரைக்கும் உங்கள் குரலுக்கு பாலியல் தொழிலுக்கு உங்களை கூவி இசைக்கும் எங்களின் குரலால் வாழ்த்திசைக்க இயலாது....! குடும்ப தீண்டாமை சமூக தீண்டாமை அரச தீண்டாமையெனும் முவ்வாளுமையில் மூழ்கிக் கிடக்கும் எம் பாலினத்தோரால் அம்மூவர்ண கொடியை உயர்த்தி பல்லிலித்திட இயலாது..! உங்களைப் போன்று இல்லாத எங்களால்.... இத்தேசத்தின் அனைத்து திசைகளிலும் வாழ்விழந்த எங்களால்.... உங்களின் வாழ்த்தின் வன்மத்தை உள்வாங்கிட இயலாது...! ஆம்...! உங்கள் வாழ்த்தில் கொடிய வன்மம் ஒளிந்திருக்கிறது..! எங்களை பொட்டை ஒம்போது உஸ்.. அலி எனும் அவ்வன்மத்தை விட எங்களிடம் நீங்கள் கூறும் சுதந்திர தின வாழ்த்தின் வன்மம் மிகக் கொடியது..! ஆகவே நண்பர்களே.... கொடிய அமிலமாம் உங்களின் சு

நீங்கள் உருவாக்கிய மனுஷி...!

Image
தண்டவாளத்தின் கிராசிங்கில் இதோ நீங்கள் உருவாக்கிய மனுஷி உங்களுக்காக காத்துக் கிடக்கிறாள்...!  குடும்பத்திலிருந்து உங்களால் விரட்டப்பட்டவள்...! நீங்கள் பயணிக்கும் தொடரியில் உங்களிடம் பிச்சைக் கேட்க உங்களுக்காக காத்துக் கிடக்கிறாள்...! நீங்கள் அவளைப் பார்த்து கண்டிப்பாக முகம் சுளிப்பீர்களென அறிந்தும் அந்த இரும்பு தண்டவாளத்தை கடப்பது போல உங்கள் முக சுளிப்புகளை கடந்து உங்களிடம் பிச்சையீட்ட அவள் உங்களுக்காக காத்துக் கிடக்கிறாள்...! அவள் எப்போது வேண்டுமானாலும் எதிர்வரும் தொடரி மோதி சாகலாம்...! அது ஒரு தற்செயல் ..! ஆனால் நீங்களிடும் பிச்சையீட்டி வாழ்வது தான் அவள் விதியாயிற்றே..! அவ்விதி வழியே... அவள் அங்கு காத்துக் கிடக்கிறாள்...! அவளை கூர்ந்து நோக்குங்கள்..! அவள் உங்களுடைய சகோதரியாக இருக்கக்கூடும்...! அவளை கூர்ந்து நோக்குங்கள்...! அவள் நீங்கள் ஈன்றெடுத்த உங்களின் பிள்ளையாக இருக்கக்கூடும்...! ....மதிப்பிற்குரிய மங்கை பானு
Image
திரு . ராமதாஸ்   அத்வாலே   அவர்களுக்கு …   உங்களின் அரசியல் நடவடிக்கைகளை கூர்ந்து கவனித்து வருபவர்களில் நானும் ஒருத்தி . ஏனெனில் அண்ணல் அம்பேத்கர் தோற்றுவித்த அரசியல் கட்சியின் தலைவராயிற்றே நீங்கள் …! அம்பேத்கரின் கருத்துக்கு நேரெதிராக இயங்கும் தற்போதைய பி . ஜே . பி . அரசின் அமைச்சரவையில் தாங்கள் அங்கம் வகிப்பது எனக்கு கசப்புணர்வை ஏற்படுத்திய போதிலும் உங்களின் சில பேச்சுக்களையும் .. கண்டனங்களையும் நான் மனமாற வரவேற்றிருக்கிறேன் ,,, வாழ்த்தியிருக்கிறேன் ..! ’’ அனைத்து விளையாட்டுகளிலும் இடவொதுக்கீடு வேண்டும் ’’ என்று நீங்கள் கோரிய போதும் ’’ சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின்கீழ் செயல்படும் டாக்டர் அம்பேத்கர் அறக்கட்டளை சார்பில் , கலப்புத் திருமணம் செய்த தம்பதிகளுக்கு ரூ .2½ லட்சம் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது . அதனை அதிகரிக்க பரிசீலித்து வருகிறோம் .’’ என்ற தங்களின் அந்த பரிசீலனை அறிவிப்பும் …   தமிழ்நாடு , மராட்டியம் ஆகிய மாநிலங்களில் நடைபெறும் கவுரவக்கொலை சம்பவங்கள் கவலை தருகிறது . இதனை தட