Posts

Showing posts from 2016

வஞ்சிக்கப்பட்டோர் தினம்(Transgender Day of Remembarence )

Image
நவம்பர் 20 வஞ்சிக்கப்பட்டோர் தினம்  வஞ்சிக்கப்பட்டோர் தினம் உயிர் நீத்த திருநங்கைகளை நினைவுகூறும் வகையில் இந்நாளை "மாற்றுபாலினத்தோரின் நினைவுதினம்" என்று என் சமூகம் கட்டமைத்து கடைபிடித்து வருகிறது...நானும் அவர்களுடன் இணைந்து இந்நாளை உயர்த்தி பிடிக்கிறேன் இது "வஞ்சிக்கப்பட்டோர் தினம் " என்று இன்னுமொரு பெயரிட்டு!!!!!!! ஆம் !!!!நாங்கள் வஞ்சிக்கப்பட்டோம் ,வஞ்சிக்கப்படுகிறோம்.. இவ்வுலகில் யாவரையும் விட அதிகமாய் நாங்கள் வஞ்சிக்கப்பட்டு கொண்டே இருக்கிறோம்...அந்த கருப்பு அடிமைகளை விடவும் ,இந்திய தலித்துகளை விடவும் ,பெண் பாலினத்தை விடவும் நாங்கள் அதிகமாய் வஞ்சிக்கப்படுகிறோம்!!!!! குடும்பத்தை அடிப்படை அலகாக கொண்டு கொத்துகுலையாய் திரட்சியுற்றிருக்கும் பொது சமூகத்தோரே............. உங்களால் நாங்கள் வஞ்சிக்கப்பட்டோம் என்பதனை நீங்கள் அறிவீரோ...!!!! குடும்பம் தொடங்கி அரசின் அங்கம் ஒவ்வொன்றிலும் நீங்கள்தான் நீங்களேதான் நிரம்பி இருக்கிறீர்!!!!இதில் எதிலும் நாங்கள் நுழையா வண்ணம் மிகு "எச்சரிக்கையோடு" இருக்கிறீர் இந்த எச்சரிக்கை உணர்வு கொடிய தீண்டாமையின

போர் பறவைகள்

Image
வல்லினம்,மெல்லினம்,இடையினத்தில் கீதம் இசைக்கும் பறவைகள் அலரித்துடிக்கின்றன, என்றோ நிகழ்ந்த அந்த கொடிய போரை நினைவூட்டும் வெடி சப்தங்களை கேட்டு !!!!அதில் எழுந்து சூழும் புகையின்நெடியை நுகர்ந்து!!!! ஆபத்து நிலையை உணர்ந்த பறவைகள் கூட்டத்தின் திட்டமிடல் உருவாகிறது.திட்ட உருவாக்கம் காக்கையின் பணி.மலைக்குருவியும்,வயல் கொக்கும்,கடல் புறாவும் முக்கியஸ்தர்கள் என தீர்மானிக்கப்படுகிறது. பருந்து தூது செல்கிறது,உடனே வந்துசேருகிறார்கள் மூன்று முக்கியஸ்தர்கள் சில கிளைகளையும் அடர் இலைகளையும் கொண்ட வேப்பமரத்தினுள்ளே கூட்டம் நிகழ்கிறது தன் சிறிய சிறகுகளை சிலிர்த்தவண்ணம் பேச துவங்குகிறது மலைக்குருவி"அவர்கள் மலைவனத்தை அழிக்கிறார்கள் அங்குள்ள மானுடத்தை கொல்லுகிறார்கள் .   மலையை உடைக்க அவர்கள் பயன்படுத்தும் வெடிமருந்து வெடியை விட அவர்கள் கொன்று போட்ட மலைவாழ் மனிதர்களின் பிணத்தின் நீச்சி அதிகமாய் இருக்கிறது!! எங்களால் அங்கு வாழவே முடியவில்லை ஏதாவது செய்யவேண்டும்!!!செய்யவேண்டும் ..!!!"என பட படப்போடு பேசி அமர்ந்தது மலைக்குருவி.அடுத்து தன் சாம்பல் நிற இறக்கையை இரண்டு முறை விசிறி கூட

To the prime minister and the leader of the central government of India, Mr. Narendra Modi

Image
LETTER To the prime minister and the leader of the central government of India, Mr. Narendra Modi , It gives us pleasure that the central government under your leadership has introduced a special bill for the protection of people like us – the transgender persons - in the parliament. Especially given that, in the early years of the 21st century, most democratic nations do not take responsibility to improve the lives and livelihoods of those who do not conform to the binary standards of gender. There are three phases that are important milestones in the history of struggle that the transgender community faced on the path to humanity, and precedes the introduction of the transgender persons (protection of rights) 2016 bill and even forms the basis of the bill. However, when we look at this TG 2016 bill and juxtapose it against the three points, I feel that we the transgender persons are surely, violently, and seve

பிரதமர் மோடி அவர்களுக்கு...

Image
மத்திய அரசின் தலைமை அமைச்சரான மாண்புமிகு திரு.நரேந்திர மோடி அவர்களுக்கு, உலகில் இயங்கும் ஜனநாயக தேசங்கள் எதுவும் இதுவரை மாற்றுப்பாலினத்தோரின் உடல் இயங்கியலையும் அவர்களின் வாழ்வியல் அவலங்களையும் களைய பொறுப்பற்று கிடக்கும் இந்த 21ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில்,மாற்றுப்பாலினத்தோராகிய எங்களின் உடல்,வாழ்வியல் அனைத்தையும் கணக்கில் கொண்டு ,எங்கெளுக்கென்று ஒரு தனி மசோதாவை தங்கள் தலைமையிலான அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருப்பதில் மகிழ்வுறுகிறேன். அதே நேரத்தில் தங்கள் அரசு இயற்றிட இருக்கிற இந்த மசோதாவோடு தொடர்புடைய ,அதற்கு அடிப்படையாக அமைந்த மூன்று விஷயங்களுடன் மாற்றுபாலினத்தோர்(உரிமைகள் பாதுகாப்பு)மசோதா 2016 யை பொருத்திப்பார்க்கையில் எங்கள் பாலினம் மிக நுண்ணிய முறையில் கொடூரமாக ஏமாற்றப்பட்டதாகவே நான் உணர்கிறேன், எங்களுக்கு கல்வி ,வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வேண்டுமென 2013ல் தங்கள் உரிமைகளை வீரியத்தோடு இத்தேசம் முழுவதும் எங்கள் பாலினம் முழங்கியது .தமிழகத்தில் நானும் கூட எம் பாலினத்தினவர்களின் உரிமைகளுக்காக போராடி காவல்துறையால் தாக்கப்பட்டிருக்கிறேன் ,பலமுறை கைதுசெய்ய

ரோம் கத்தோலிக்க மடாதிபதி பிரான்ஸிஸ் போப் அவர்களுக்கு...

Image
நேற்றைய தினம் மாற்றுப்பாலினத்தவரைபற்றி(திருநர்) கருத்து கூறுகையில் "தாங்கள் பாலினத்தை தாங்களே தீர்மானித்துகொள்ளகூடாது" என்றும்"கடவுள் படைத்த உருவத்தை மாற்றக்கூடாது என்றும் கூறியிருந்தீர். இது போன்று இறுகிக்கெட்டிதட்டிப்போன கருத்தியலை கடவுளின் பெயரால் தாங்கள் உதிர்ததைக் கண்டு வியப்பேதுமில்லை எனக்கு காரணம் நீங்கள் கொண்டிருக்கும் கருத்தியல் மிகவும் பழையது .அதை உதிர்க்கும் உங்கள் உருவம் மட்டுமே புதியது. "ஆணுடலினுள் முரண்படும் பெண் உளத்தியல் துன்பத்திலிருந்து மீள அறுவைசிகிச்சையை நேசித்து உடலளவிலும் பெண்ணாய் உறுமாறுகிறோம் என உலகின் முன் நின்று நாங்கள் உரத்து முழங்கிய பிறகும் தாங்களால் உள்வாங்க முடியாதது ஏன் என்ற மதசூட்சமத்தை புரிந்துகொள்ளமுடியாதவளல்ல நான் . அறுவைசிகிச்சையின் கர்த்தாவாக இன்று கருதப்படுகின்ற 16ஆம் நூற்றாண்டு ஜெர்மனியின் ஆன்றியஸ் சோசியலியஸ் அவர்கள் எழுதிய மனித உடல் கட்டமைப்பியல் (The Fabrics of Human Body) என்ற நூலை கிருத்துவ மதத்திற்கு எதிரானது என்பதாக கூறி அவர் கையாலேயே அம்மாபெரும் நூலை கொளுத்திய கொரூரத்தை புரிந்த முகாமைச்சேர்ந

தாரிகா பானு

Image
தாரிகா ஒரு தேசத்த்தின் வளர்ச்சியை அதன் திசையை தீர்மானிப்பதில் கல்வி முக்கிய பங்கு வகிக்கிறது .நம் தேசத்தில் அத்தகைய கல்வி எத்தகைய பங்கு வகிக்கிறயது என்பதை திருநர் சமூகமாகிய நாங்கள் கல்வி கேட்டு அத்துறையின் படிக்கட்டுகளில் ஏறி இறங்கும்போது நேருக்குநேர் எதிர்கொள்கிறோம் .எங்களின் எதிர்கோள்கள் நிறைய இருப்பினும் திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் அதன் கட்டுப்பாட்டில் இருக்கிற பள்ளிகளில் நாங்கள் எதிர்கொண்ட பாலினதீண்டாமை !அதனினும் உச்சம்! "தீண்டாமை ஒரு பாவச்செயல் !தீண்டாமை ஒரு பெருங்குற்றம்!" என்ற அம்மாபெரும் சொற்றொடர் புத்தகங்களின் முதல் பக்கத்தில் மரணித்திருப்பதை தாரிகாவை பள்ளியில் சேர்த்துகொள்ளாமல் புறக்கணித்த ஆசிரியர்கள் ,அதிகாரிகள் வாயிலாக நேரே உணர்ந்தோம்! எங்களுக்கு கல்வி வழங்க கூட முடியாமல் இந்த தேசம் ஏன் இயலாமையின் உச்சத்தில் இருக்கிறது ?இத்தகைய இயலாமையின் அடிபடையாக இருக்கிற திருநர் பற்றிய புரிதலை ,திருநர் உடல் இயங்கியலை இவர்களுக்கு எப்படி புரிய வைப்பது?இத்தேசத்தின் தலையாயதாக கருதப்படுகின்ற உச்சநீதிமன்றமே கல்வி,வேலைவாய்ப்பில் எங்களுக்கு முன்ன

தேர்தல் ஆணையம்

எங்கள் சமூகத்தின் மாணுட அங்கீகாரம் மறுத்து, சர்வதேசிய சமூகத்தின் முன்னால் நின்று ‘ஜனனாயகம்’ என்ற வார்த்தையால் தன்னை சீவி சிங்காரித்து நிற்கும் இத்தேசத்தைப் பார்க்கும்போது ‘ஒய்யாரக் கொண்டையாம் தாழம் பூவாம் உள்ளே ஈரும் பேணாம்” என்கிற கிராமத்துக் கிண்டல் தான் நினைவுக்கு வருகிறது. ’மக்களாட்சி’ என சுயத் தம்பட்டம் அடிக்கும் இத்தேசத்தின் அரசியல் அமைப்பால் நிறுவப்பெற்ற,நீதித் துறையைப் போன்று தன்னாட்சி அதிகாரம் கொண்ட இந்த தேர்தல் ஆணையத்தால் இப்போதும் எங்கள் பாலினத்தின் மாணுட உரிமை மறுக்கப் பட்டிருக்கிறது.2014 ஏப்ரல் 15-ல் இத்தேசத்தின் தலையாய அதிகாரம் கொண்டதாக சொல்லப்படுகிற உச்சநீதிமன்றமே எங்களின் பல்வேறு உரிமைகளை உள்ளடக்கிய சிறப்பு வாய்ந்த தீர்ப்பு வழங்கியப் பிறகும் தன்னாட்சிப் பெற்ற பகுதியளவு நீதித் துறையாய் இயங்குகிற இந்த தேர்தல் ஆணையம், எங்கள் பாலினம் தேர்தலில் பங்கெடுக்க தெளிவான வரையரையை வழங்கவில்லை எனில் இந்த தேர்தல் அமைப்பு எதனுடைய வழிகாட்டலில் இயங்குகிறது.மாணுடம் ஒன்றே எனும் அடிப்படை உள்ளடக்கியிறுக்கிற அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் இயங்குகிறதா? அல்லது இம்மாணுட சமூகத்தைப் பிட

நடக்க முடியாத குதிரைக்கு சறுக்கியது சாக்கு....பி.ஜே.பி அரசின் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான கொள்கைக்கு மக்கள் விரோத காங்கிரஸ் சாக்கு............

கடந்த 2014 ஏப்ரலில் இந்நாட்டின் தலையாய மன்றமாக கறுதப்படுகின்ற உச்சநீதிமன்றம் திருநங்கை,திருநம்பியருக்கு கல்வி,வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் அதற்கான சட்டங்களை மத்தியிலும் மாநிலங்களிலும் இயற்றுங்கள் என்று சொன்ன பிறகும்,தனிநபர் மசோதா ,திரு.திருச்சி சிவா அவர்களால் 36 ஆண்டுகளுக்குப் பிறகு நாடாளுமன்றத்தி ன் மாநிலங்களவையில் முன் மொழியப்பட்டு ,அனைத்துக் கட்சி உறுப்பினர்களின் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.(அதை சமூக நீதி அதிகாரமளித்தல் துறை (social justice)அமைச்சகம் காதோடு காது வைத்தாற் போல இணையத்தில் கருத்துக் கேட்டு பல மாற்றங்களை தன் விருப்பத்திற்கு மாற்றியதென்பது வேறு) இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜனவரி 03 ஆம் தேதி சமூக நீதி அதிகாரமளித்தல் துறையின் அமைச்சர் திரு.தவார் காண்ட் கெலாட் “உச்ச நீதி மன்றமே இயற்றிட உத்தரவிட்ட திருநங்கை திருநம்பி மசோதா, விவாதத்திற்கு மக்களவையில் காத்திருப்பதாகவும் ஆனால் காங்கிரஸ் நேஷனல் ஹெரால் விவகாரத்தை எழுப்பி நாடாளுமன்றத்தை முடக்க நினைக்கிறது என்பதாகவும் கூறியிருந்தார்.ஆனால் அதன் பிறகு ஹெரால்ட் போனது,,,ரோ