Posts

Showing posts from January, 2018

மது எனும் கொடிய நஞ்சு...! Abolishing Alcohol..!

Image
மது ஒழிப்பில்.... மது எனும் கொடிய நஞ்சு ஒட்டுமொத்த மக்கள் திரள் மீது இன்றைக்கு தெளிக்கப்பட்டு வருகிறது.நம் கண் முன்னால் மக்கள் செத்து மடிவதும் சீரழிவதும் நடந்தவண்ணம் தான் உள்ளத்ய்.இந்நாட்டில் நிகழ்ந்தேறும் ஒவ்வொரு கொலைகளுக்குப் பின்னால் ஒவ்வொரு கற்பழிப்புக்கு பின்னால்,ஒவ்வொரு விபத்தின் பின்னால்,ஒவ்வொரு குடும்ப பிரிவுகளுக்குப் பின்னால் மது ஒரு முக்கிய காரணியாக செயல்படுவதை நாம் காண முடியும் இந்த அரசாங்கம் வருவாயை மட்டுமே முக்கியமாக எடுத்துக்கொண்டு மக்களை அவல நிலைக்குத் தள்ளுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.மது விசயத்திலும் முரண்களைக்கொண்ட நாடாகவே திகழ்கிறது.குஜராத், மணிப்பூர் ,நாகலாந்தில் தடை செய்யப்பட்டிருக்கும் மது தமிழகத்தில் திறந்து விடப்படுகிறது எனில் அதன் நொக்கம் என்ன? மதுவினால் ஒட்டு மொத்த மக்களும் பாதிப்புக்குள்ளாகிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் மற்ற சமூகத்துக்குநிகரான பாதிப்பையே எங்கள் சமூகமும் அடைகிறது.எந்த தீமையும் பலவீனமானவர்களையேத் தாக்கும் என்ற கூற்றுப்படி,பொதுச் சமூகத்தினால்  தீட்டிற்கும் தீண்டாமைக்கும் ஆட்பட்டிருக்கும் எங்கள் சமூகம் மதுவின் கொடிய பாதிப்புகளை சுமந்து திரிகிற

Rohith Vemula Shahadath Din..!!ரோகித் வெமுலாவின் நினைவு நாள்!!

Image
தோழர்கள் அனைவருக்கும் ஜெய்பீம்..! இன்று தோழர் ரோஹித் வெமுலா வின் இரண்டாம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு கடந்த வருடம் காவல்துறையின் அடக்குமுறையினால் இந்த நிகழ்வு நடைப ெறவில்லை.இந்த வருடம் இதை எப்படியாவது நடத்திகாட்டவேண்டும் என போராடி இந்நிகழ்வை ஒழுங்கு செய்திருக்கும் அம்பேத்கர் மாணவர் கூட்டமைப்பிற்கு எனது நன்றி.தொடர்ச்சியாக பல்கலைகழக படுகொலைகளை அரங்கேற்றிகொண்டிருக்கிறது இந்த இந்து பாசிச அரசு ரோஹித் போன்ற மாணவர்கள் மட்டும் அல்லாமல் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த சரண்யா,மோனிஷா,ப்ரியங்கா ,அனிதாபோன்ற மாணவிகளின் இரத்தத்தையும் இந்த பயங்கரவாத அரசு குடித்திருக்கிறது.மேலும் நஜீப்,முத்துகிரிஷ்ணன்,சரவணன்,ஜோயேல் சமீபத்தில் சரத்பிரபு என்ற மாணவன் டெல்லி யில் எம்.எஸ் படித்து கொண்டிருந்த திருப்புரைசேர்ந்தவர் மர்ம மான முறையில் இறந்திருக்கிறார் இது போன்ற கொரூரங்கள் நடைபெறுவதற்கு சாதியமும்,தனியார்மயமும் தான் காரணம்.உலகவர்த்தக கழத்தில் இந்தியா கையெழுத்திட்ட நாள்முதல் கல்வி உட்பட அனைத்தும் தனியார்மயக்கப்பட்டு கொண்டிருக்கிறது அதன் காரணமாகதான் பல்கலைகழத்திற்கு கொடுததுக்கொண்டிருந்த மானியங்கள் நிறுத்திவைக்கப்பட்