Posts

Showing posts from October, 2017

மாற்றுபலினத்தவர் மீதும் அக்கறை கொண்ட தோழர்.கௌரிலங்கேஷ்

Image
கடந்த மாதம் காட்டாட்சியின் கொலை ஆயுதங்களால் உசுரிழந்தார்கள் தமிழகத்தில் வளரும் லங்கேஷும் கன்னடத்தில் வளந்த அனிதாவும்.அனிதாவின் கழுத்தை இறுக்கியது தூக்குக் கயிறாக இருக்கலாம்,லங்கேஷை துளைத்தது துப்பாக்கித் தோட்டாக்களாக இருக்கலாம்.ஆனால் அதை எய்த கைகள் ஒன்றுதானே…! அந்த கரங்கள் தானே மஹராஷ்ரத்தில் 21.08.2013 அன்றின் காலைப் பொழுதின் முகத்தில் நரேந்திர தபோல்கரின் ரத்தத்தை பூசி சென்றது…!அந்த கரங்கள் தானே 19.02.2015 அன்று அதே மஹராஷ்ரத்தில் அதேப் போன்றதொரு காலைப் பொழுதின் முகத்தில் கோவிந் பன்சாரேவின் ரத்தத்தைப் பூசி சென்றது.கெளரியையும் கல்புர்கியையும் பன்சாரேவையும் ஒரே பானியிலேயே அவர்கள் கொன்றிருக்கிறார்கள் அது மோட்டார் சைக்கிள்,முகமூடி, 7.6 எம்.எம். அளவுள்ளத் துப்பாக்கி.இதுவே அவர்களின் பானியாக இருக்கிறது.அவர்களின் இந்த பானியால் சமூக செயல்பாட்டாளர்கள்,எழுத்தாளர்கள் போன்றோரின் மனங்களில் மரண பயத்தை விதைக்க நினைக்கிறார்கள்.அத்தகைய நினைப்பிற்கு நீரூற்றி வேலியடித்து அதற்கு ஒன்றும் நேர்ந்திடாதவாறு காத்து வருகிறது பி.ஜே.பி.ஆட்சி. அவர்கள் அந்த மசூதி இடிப்பைப் போன்றே,அந்த ரத யாத்திரையைப் போன்றே,க

திருநர் தீட்டாத வீடோவியம்..!!!!!

Image
 திருநர் தீட்டாத வீடோவியம்..!!!!! மனித சமூகம் நாகரீகம் அடைந்ததின் ஒரு குறியீடு வீடு. சமூகத்தில் வீடு வகிக்கும் பாத்திரம் மகத்தானது.உயிரற்ற கல்லும் மண்ணும்,கூரையும் ஓலையும்,தரையும் தளமும் உயிருள்ள ரத்த உறவுகளின் உணர்வுகளை குழைந்து எழுந்து நிற்கும்.சில பழங்காலத்து வீடுகள் மரபுவழிப்பட்ட தங்கள் உறவுகளின் உயிரோட்ட உணர்வுகளை கடத்திக் காட்சிப் படுத்தும் அற்புத அமைப்பாக இயங்கும்.அந்த அமைப்பின் ஏதோ ஒரு பகுதி சிதிலமடைந்தால் அங்கே வசிக்கும் உசுருகள் பதறித் துடிக்கும்.ஏனெனில் அது அவர்களின் முன்னோர் கல்லாலும் மண்ணாலும் வரைந்திட்ட வீடோவியம். சில புது வீடுகள் அங்கே குழுமி வாழும் ரத்த உறவுகளின் இன்பங்களை ரசித்து சுவைக்கும்.சில சமையம் இவர்களை உறசிச் செல்லும் துன்பங்களைக் கண்டு மனம் வெதும்பும்.ஏனெனில் இவர்கள் தங்களின் நிம்மதியின் இன்பத்திற்காகவே அந்த வீடோவியத்தை வரைந்திருக்கிறார்கள். இன்றைக்கு பல்வேறு காரணங்களால் மக்கள் தங்கள் வீட்டோவியத்தை இழந்து நிற்கிறார்கள்.  பொருளாதார வெறி உச்சமடைந்து போர் வெறியாக மாறும் போது தனது பீரங்கிகளால், எளிய மனிதர்கள் வரைந்திட்ட வீட்டோவியத்தை பெயர்த்தெடுக்கி